25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வெடிபொருள் பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களும் இயங்குவதை நிறுத்தம் செய்து மூடிட வேண்டும்  தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வெடிபொருள் பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களும் இயங்குவதை நிறுத்தம் செய்து மூடிட வேண்டும் தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது

மக்களவை பொது தேர்தல் - 2024-ஐ முன்னிட்டு,  தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மற்றும் அதற்கு முன் மற்றும் பின் உள்ள நாட்கள் 17.04.2024 முதல் 20.04.2024 வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மற்றும் அதற்கு முன் மற்றும் பின் உள்ள நாட்கள் 02.06.2024 முதல் 05.06.2024 வரையிலும் உள்ள காலகட்டத்தில் வெடிபொருள்கள் சட்டம் 1884-இன் கீழ் செயல்படும் வெடிபொருள் பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களை மேற்படி நாட்களில் செயல்பட தடைவிதித்தும் மற்றும் மூடிடவும், மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு பட்டாசுகள் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்திடுமாறும்  தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி அரசாணையின்படி, 17.04.2024 முதல் 20.04.2024 வரையிலும் மற்றும் 02.06.2024 முதல் 05.06.2024 வரையிலும் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வெடிபொருள் பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களும் இயங்குவதை நிறுத்தம் செய்து மூடிட வேண்டும் என பட்டாசு கடை மற்றும் குடோன்களின் உரிமையாளர்கள் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மேற்படி காலகட்டத்தில் பிற மாநிலங்களில் இருந்து, விருதுநகர் மாவட்டத்திற்கு பட்டாசுகள் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்திட உரிய நடவடிக்கைகளை காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News