ரோட்டில் திரியும் பராமரிப்பற்ற கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு.
ராஜபாளையத்தில் ரோட்டில் தெரியும் பராமரிப்பற்ற கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பதுடன் வாகன ஓட்டிகள் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ராஜபாளையம் முடங்கி யார் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, தென்காசி ரோடு, டி.பி மில்ஸ் ரோடு, சத்தி ரப்பட்டி ரோடு என முக் கிய சாலைகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை நகர்ப்புற உட்புற சாலை கள் அனைத்திலும் மாடுகள் திரிந்து வருகின்றன. பகல் இரவு என எந்த நேரமும் ,ரோட்டின் ஒரு பகுதியை தங்குமிடமாக மாற்றி உறங்குகின்றன. இதை அறியாமல் வேகமாக வரும் வாகன ஓட்டி கள் மோதி ,விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர்.
மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு வாகனங்களில், மோதுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. மாடுகளை முறையாக பராமரிக்காமல் சாலைகளில் அவிழ்த்துவிடும் ,உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டும், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் விட்டுள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர்.
0
Leave a Reply