25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழக வீராங்கனை வைஷாலி கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்று, 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக வீராங்கனை வைஷாலி கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்று, 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

 'பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி தொடர் ஓபன் மற்றும் பெண்கள் என இரு பிரிவில் நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள், அடுத்த ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

நேற்று முன்தினம் இரவு நடந்த ஓபன் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த குகேஷ், ஸ்பெனின் டேனியல் யூபாவை எதிர்கொண்டு ஆடிய குகேஷ் 35-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி 65-வது நகர்த்தலில் ஆன்டன் டெம்சென்கோவை (சுலோவேனியா) வென்றார். தமிழக வீரர்பிரக்ஞானந்தா 65-வது நகர்த்தலில் போரிஸ் ஜெல்பாண்டை (இஸ்ரேல்) தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றார். விதித் குஜ ராத்தி (இந்தியா)- அலெக்சாண்டர் பிரெட்கே (செர்பியா), கார்த்தி கேயன் முரளி-திவ்யா தேஷ்முக் (இருவரும் இந்தியா) இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

தமிழக வீராங்கனை ஆர்.வைஷாலி ,பெண்கள் பிரிவின் 3-வது சுற்றில் 38-வது நகர்த்த லில் ஒல்கா படேல்காவை (ஆஸ்திரியா) தோற்கடித்து , வெற்றியை பதிவு செய்தார். அத்துடன் அவர் தனது பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News