தேங்காய் சாதம் செய்யும்போது, அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்து பொடி செய்து ,கலந்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
பால்திரிந்து போனால் அடுப்பில் தீயை குறைத்து கிண்டி கொண்டே வந்து, தண்ணீர் வற்றியதும், கொஞ்சம் சர்க்கரை ,கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் வாசனையான திரட்டு பால் ரெடி
கறிவேப்பிலை அதிகமாக இருந்தால் சட்டியில் போட்டு ஈரப்பதம் போக வதக்கி அதில் காய்ந்த மிளகாய் பூண்டையும் வறுத்து நன்கு பொடி பண்ணி வைத்துக் கொண்டு இதை இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம். சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடலாம் இதனால் முடி வளர்ச்சி கண்பார்வை தெளிவாகும்.
சமையலில் காரம் கூடிவிட்டால் கொஞ்சம் எலுமிச் சை சாறு பிழிந்து விட்டு காரத்தை குறைக்கலாம்.
தேங்காய் சாதம் செய்யும்போது, அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்து பொடி செய்து ,கலந்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
அரிசி மாவினால் தோசை சுடும்போது, அதனுடன் சுமார் ஒரு கரண்டி அளவிற்கு கோதுமை மாவோ, மைதா மாவோ கலந்து சுட்டால் தோசை மிகவும் மிருதுவாக வரும்.
0
Leave a Reply