இராஜபாளையம் புது பஸ் ஸடாண்டில் செயல்பாட்டிற்கு வருமா 'நம்ம டாய்லெட்'
பஸ் ஸ்டாண்ட்உள்ளிட்ட பொது வெளிகளில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுத்து கழிப்பறைகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டதே 'நம்ம டாய்லெட் திட்டம்' இதில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளத்துடன் கூடிய கழிப்பறை பெண்களுக்காக நவீன தொழில் நுட்பம் உள்ள பைபர் பிளாஸ்டிக்கினால் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் நான்கு அறைகளுடன் அமைக்பப்பட்டது.
இதில் தானியங்கி முறையில் சுத்தம் செய்யும் வசதியும், சோலார் மின்விளக்கு, வசதியும் அமைக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு சிறிது காலம் செயல்பாட்டில் இருந்த நிலையில், போதிய நீர் வசதி பராமரிப்பு இன்றி, பயன்பாடு இல்லாமல் போனது. இதனால் கூட்ட நேரங்களில் இதனை நாட முடியாமல், பெண்கள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில், இதனைச் சுற்றி திறந்த வெளியாக பயன்படுத்தும் அவலம் நடைபெறுகிறது. நம்ம டாய்லெட் திறக்கப்படாமல் உள்ளதை செயல்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் எதிர்பார்க்கின்றனர்
0
Leave a Reply