25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இந்திய இரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் அறிவிக்கப்பட்டுள்ள Non-Technical Popular Categories(NTPC) பணியிடங்களுக்கு  ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய இரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் அறிவிக்கப்பட்டுள்ள Non-Technical Popular Categories(NTPC) பணியிடங்களுக்கு ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு

இந்திய இரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் அறிவிக்கப்பட்டுள்ள Non-Technical Popular Categories(NTPC) பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித்தகுதிக்கு (3445 பணிக்காலியிடங்கள்) மற்றும் பட்டப்படிப்பு கல்வித்தகுதிக்கு (8113 பணிக்காலியிடங்கள்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டித் தேர்வுக்கு முறையே 20.10.2024 மற்றும் 13.10.2024-ஆகிய தேதிக்குள் www.rrbchennai.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள ஆர்வலர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு 27.09.2024 அன்று விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கல்லூரியில் காலை 09.30 மணி முதல் நடைபெற இருக்கிறது.

 இவ்வகுப்பில் திறன் வாய்ந்த பயிற்றுநர்கள் கலந்து கொண்டு தேர்வு குறித்த அடிப்படை பயிற்சி மற்றும் தேர்வு குறித்த ஐயங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கல்லூரிக்கு நேரில் வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை 93601-71161 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். எனவே இப்போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஆர்வலர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News