25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விருதுநகர் மாவட்ட அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு  “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு” பள்ளி திட்டத்தின் மூலமாக சமூக பங்களிப்பு நிதி வழங்க பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வேண்டுகோள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்ட அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு” பள்ளி திட்டத்தின் மூலமாக சமூக பங்களிப்பு நிதி வழங்க பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோள்

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் பெரும் முயற்சிகளில் ஒன்றாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காகவும், சமூக பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை ஒருங்கிணைக்கவும் 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது பங்களிப்புகளை பொருளாகவோ பணமாகவோ அல்லது களப்பணி செய்வதன் மூலமாகவோ பங்களிக்கலாம்.

இத்திட்டத்தின் வாயிலாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள்,  மற்றும் தனிநபர்கள் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பங்களிக்கலாம். நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி <https://nammaschool.tnschools.gov.in/#/  என்ற தளத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள தங்களுக்கு விருப்பமான அரசு பள்ளியை தேர்ந்தெடுத்து, அப்பள்ளியின் தேவைகளை பூர்த்தி செய்யலாம்.  

பொருளாதாரத்தில் பின்தங்கிய  மாணவர்கள் பள்ளி படிப்பிற்கு பின்னர் முதன்மை கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை தொடர்வதற்கான உதவிகளை பணமாகவோ அல்லது அவர்களின் கல்வியை ஆதரிக்கும் வகையில் மடிக்கணினி வழங்கியோ பங்களிப்பாளர்களால் நிறைவேற்ற முடியும். ஒவ்வொரு பள்ளிக்கான தேவைகளும் அந்தந்த பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு (SMC) மற்றும் தலைமை ஆசிரியரால் உறுதிசெய்யப்பட்ட பின்னரே NSNOP தளத்தில் பதிவேற்றப்படும்.

NSNOP  இணையதளத்தில் நன்கொடையாளர்களுக்கென பிரத்யேகமான டாஷ்போர்டு வழங்கப்படும். இந்த 'நன்கொடையாள் டாஷ்போர்டு' வாயிலாக பங்களிப்பாளர்கள் தங்களது பங்களிப்புகளின் பயன்பாட்டை வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியும் மற்றும் பங்களிப்பாளர்களுக்கு கல்வித் துறையினால் வழங்கப்பட்ட பயனீட்டு சான்றிதழ், வரி விலக்கு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும், இத்திட்டத்தின் செயல்பாடுகள் மாவட்ட ஆட்சியரால்  கண்காணிக்கப்படும்.

எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் இந்த பணியில் இணைந்து பொதுமக்கள் அனைவரும் பங்களிக்க வேண்டும். மேலும்  பொதுமக்கள்  <nammaschool@tnschools.gov.in>  என்ற முகவரிக்கு மின்னஞ்சல்  அல்லது 63853 13047 என்ற எண்ணின் வாயிலாக நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி குழுவை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News