25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து,  அம்மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் விதமாக உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (05.09.2024) நடைபெற்றது.

தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 2023-2024 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 97 சதவீத மாணவர்கள், உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் 12-ஆம் வகுப்பு உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் விதமாக இன்று நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட  மாணவர்கள் கலந்து கொண்டனர். இம்மாணவர்களிடம்; தனித்தனியாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதற்கான காரணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டியின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர முடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம், அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி தொடர்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களில் 11 மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 5 மாணவர்கள் தனியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 11 மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் என முதற்கட்டமாக மொத்தம் 27 மாணவர்கள் உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான முதலாமாண்டு கல்வி கட்டணம் விருதுநகர் கல்வி அறக்கட்டளையின் மூலம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள மாணவர்களையும், உயர்கல்வியில் சேர்க்கை பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வன், அரசு அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News