25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நூலகர் தின விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நூலகர் தின விழா

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நூலக அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் நூலகர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் (12.08.2024) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், நூலகர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டி, வார்த்தை, பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற நூலகர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்

நூலக அறிவியலின் ஐந்து கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு நூலகத்தை எப்படி பல்கலைக்கழகங்களாக உருவாக்க முடியும். சாதாரண மனிதர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக வாசிப்பதற்கு எப்படி நூலகம் உறுதுணையாக இருக்கிறது. ஒரு நூலகத்தில் நூலகரின் பணிகள் என்னென்ன என்பவற்றையெல்லாம் குறித்து மிக விரிவான கோட்பாடுகளை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், தனது வாழ்நாள் முழுவதும் நூலகத்தை செம்மையுடன் பேணுவது குறித்து தொடர்ச்சியாக யோசித்து சிறந்த நூலகராக இருந்த இந்திய நூலகத்தின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்டு 12-ம் தேதி தேசிய நூலகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.நமது மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நூலகங்கள் அமைக்கப்பட்டதோடு, தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களின் கீழ் நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டு வருகின்றது.தற்போது கூட நமது மாவட்டத்தில் 25 நூலகங்களுக்கு மேல் புதிதாக கட்டடங்கள் கட்டுவதற்கும், கட்டடங்கள் பழுது பார்ப்பதற்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.இன்று கைபேசியில் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அனைத்தும் இணையதளங்களில் கிடைக்கிறது. இன்றைய நவீன தகவல் தொழில் நுட்ப யுகத்தில் நூலகங்களுக்கான தேவை இருக்கிறதா என்ற ஒரு கேள்வி இருக்கிறது.

ஆனால் ஒரு புள்ளி விவரத்தை எடுத்து ஆய்வு செய்து பார்த்தால் நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் வாசிப்பதற்கு கிடைத்தாலும், இன்னும் முறையாக வாசிக்க கூடியவர்கள், ஒரு தலைப்பை எடுத்து அந்த தலைப்பில் முறையாக படிக்கக் கூடியவர்களுக்கு இணையமும் அதை ஒட்டி உள்ள தொழில்நுட்பங்களும் துணைக் கருவிகளாகத்தான் இருக்கின்றதே தவிர முழுமையாக வாசிப்பதற்கு என்று புத்தகங்கள் தான் ஒரு அமைப்பாகவே இருக்கிறது.இளைஞர்களும், புதிய தலைமுறையினரும் எந்தெந்த துறையினை வாசிக்கிறார்கள் என்பதில் தான் அவர்களுடைய அறிவு திறப்பு மாறி இருக்கிறது. பொது நூலகங்களில், புத்தகக் கண்காட்சிகளில், புத்தக விற்பனை நிலையங்களில் எல்லாம் ஜோதிடம் மற்றும் சமையல் கலை ஆகிய இரண்டு நூல்கள் தான் அதிகம் விற்பதாக புள்ளிவிவரமாக சொல்லப்படுகிறது.ஆனால் இதையும் தாண்டி அவர்கள் வசிப்பதற்கு எவ்வளவு துறைகள் இருக்கின்றன. ஒரு பொழுதுபோக்கு வாசிப்பில் கூட இன்று நிறைய மாற்றங்கள் உருவாகி இருக்கிறது. எனவே நூலகர்களின் தேவை முன்னெப்போதையும் விட தற்போது தான் அதிகமாக இருக்கிறது.இன்னும் நிறைய நூலகங்கள் கிராம புற பகுதிகளில்; இளைஞர்களை வாசிப்பதற்கு ஒரு மையமாக இருக்கிறது. இன்னும் நிறைய புதிதாக சிந்திப்பதற்கு வாசிப்பு தான் மிக அடிப்படை.

நூலகங்கள் என்பது எல்லோரும் வந்து வாசிப்பதற்கு உரிய இடமாக உருவாக்குவதில் நூலகரின் பங்கு மிக முக்கியம். பெண்கள், கல்லூரி மாணவர்கள் வாசிப்பதற்கு அதற்குரிய இடமாக உருவாக்குவதற்கு நூலகரின் பங்கு மிக முக்கியமானது. தற்போது நமது மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெறஇருக்கிறது.இந்தபுத்தகத்திருவிழாவையொட்டி நூலகர்கள் அந்தந்த நூலகங்களில் இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் வந்து வாசிப்பதற்குரிய ஒரு இடமாக வாசிப்பு இயக்கமாக உருவாக்க வேண்டும்.இதனால் நூகலத்திற்கு வரக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். நூலகங்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தினால் தான், புதிய நூல்கள் வாங்குவதற்கான தேவைகள் ஏற்படும். எனவே நூலகங்களை பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் வாசிப்பதற்குரிய ஒரு இடமாக நூலகர்கள்; அவற்றை அங்கு உருவாக்குவதற்கு தொடர்ச்சியாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி நூலகர் முனைவர் யாஸ்மின், மாவட்ட நூலக அலுவலர்(பொ) திரு.சுப்பிரமணியன், மாவட்ட நூலக கண்காணிப்பாளர் திரு.பழனிக்குமார் உட்பட நூலக பணியாளர்கள், நூலகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News