25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மதி சிறகுகள் தொழில் மையத்தின் மூலமாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை மூலம் இ-சேவை மையம் 01.08.2024 முதல் செயல்பட துவங்கப்பட்டுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மதி சிறகுகள் தொழில் மையத்தின் மூலமாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை மூலம் இ-சேவை மையம் 01.08.2024 முதல் செயல்பட துவங்கப்பட்டுள்ளது

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ஊராட்சிகளில் தொழில் மேம்பாட்டினை வலுப்படுத்தவும், தொழில் முனைவோருக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வணிக மேம்பாட்டு உதவி சேவைகளை வழங்குவதற்கு மதி சிறகுகள் தொழில் மையம் துவங்கப்பட்டு இயங்கி வருகிறது.மதி சிறகுகள் தொழில் மையம் மூலமாக தொழில் திட்டம் தயாரித்தல், தொழில்நுட்ப விபரங்கள், திறன் பயிற்சி குறித்த விவரங்கள், சந்தை பற்றிய தகவல்கள், நிதி இணைப்புகள், பிறதுறை இணைப்புகள், வணிக இணைப்பு கூட்டம், வழிகாட்டுநர்கள், துறை ரீதியான ஆலோசனைகள் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மதி சிறகுகள் தொழில் மையத்தின் மூலமாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை மூலம் இ-சேவை மையம் 01.08.2024 முதல் செயல்பட துவங்கியுள்ளது.

இதன் மூலம் மக்களுக்கு தேவையான சேவைகள் அனைத்தும் அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் தொடங்குவதில் ஏற்படும் இடையூறுகளையும், தடைகளையும் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான சேவைகளும், அனைத்து துறை ரீதியான கடன் நிதி பெறுவதற்கு தொழில் திட்டம் தயாரித்தல், சட்டபூர்வ ஆவண பதிவுகள் (PAN, GST, MSME, FSSAI…)  தொழிலாளர் நல வாரிய அட்டை, வருவாய் நிர்வாகம் சார்ந்த ஆவணங்கள் (அடங்கல், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்…,) மற்றும் அனைத்து துறை சார்ந்த ஆவணங்களும் பெற்று தரப்படும்.

மேலும் கடன் பெற்றவர்களுக்கான வணிக இணைப்பு கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை அன்று மதி சிறகுகள் தொழில் மையத்தில் வைத்து நடத்தப்பட்டு வருகிறது. இச்சேவை மையத்தை அனைத்து வட்டாரங்களைச் சார்ந்த நபர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதி சிறகுகள் தொழில் மையம், முதல் தளம், பூமாலை வணிக வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், விருதுநகர் - 626001. கைபேசி எண்: 95147-37043, 99941-42115. மின்னஞ்சல் முகவரி: vkpwlc.vnr@gmail.com. என்ற முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News