25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் மட்டும் கடன் பெருமாறும், அதிக வட்டி வசூலிக்கும் மற்றும் கடன் செயலிகள் மூலம் கடன்களை பெற வேண்டாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் மட்டும் கடன் பெருமாறும், அதிக வட்டி வசூலிக்கும் மற்றும் கடன் செயலிகள் மூலம் கடன்களை பெற வேண்டாம்

விருதுநகர் மக்களுக்கு ஒருவிழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவு. தற்பொழுது நமது மாவட்டத்தில் முறையாக அனுமதி பெறாத பல சிறு நிதி நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், அவைகள் பொது மக்களுக்கு அதிக வட்டியில் கடன்களை வழங்கி மக்களை மிகவும் கஷ்ட்டப்படுத்துவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு சமீபகாலமாக நிறைய மனுக்கள் வருகின்றன.எனவே நமது மாவட்டத்தில் இயங்கும் சிறு நிதி நிறுவனங்கள் (மைக்ரோபைனான்ஸ் கம்பெனி (MFI) மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று இயங்க வேண்டும்.

 மேலும், முறையான அனுமதி பெற்ற நிதி நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் மட்டுமே கடன்கள் வழங்க வேண்டும். அதனை மீறும் நிதி நிறுவனங்களின் மீது கடன் வழங்கும் சட்டத்தின் (Money Lending Act)  கீழ் கடுமையான நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.மேலும் பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் மட்டும் கடன் பெருமாறும், இவ்வாறு முறையின்றி நடத்தப்படும், அதிக வட்டி வசூலிக்கும் மற்றும் கடன் செயலிகள் மூலம் கடன்களை பெற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

வங்கிகள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கடன் விண்ணப்பங்களை முறையாக பரிசீலினை செய்து உரிய காலத்திற்குள் விண்ணப்பதாரருக்கு முறையான பதிலை தர வேண்டும். இவ்வாறு செயல்படும் நிதி நிறுவனங்கள் மற்றும் செயலிகள் கடன்களை வழங்கிய பின்பு சட்டத்திற்கு புறம்பாக வசூல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. எனவே பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News