25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்  திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்  I A S, அவர்கள்  (24.07.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவில்லிபுத்தூர் கூட்டுறவு நூற்பாலையினை பார்வையிட்டு நாற்பாலையின் இயக்கம் நிறுத்தப்பட்டது குறித்தும், தற்போது அதனுடைய நிலை குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், மல்லி ஊராட்சி உள்;ர்பட்டி கிராமத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.53 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கு பணி ஆணை பெற்ற பயனாளியிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வீடு கட்டுவதற்கான நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, முள்ளிக்குளம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,மல்லிபுதூர் ஊராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில், புதிய நூலகம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், இராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் சாரதா வித்யாலயா ஆரம்பப்பள்ளியில் கட்டடத்தின் தரம் மற்றும் மதிய உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) திருமதி ஜெ.உஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திருமதி சா.தேவாசீர்வாதம், வட்டாட்சியர், உதவிப்பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News