25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மல்லிப்புதூர் ஊராட்சியில் சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள்  இல்லத்தினை நேரில் சென்று ஆய்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மல்லிப்புதூர் ஊராட்சியில் சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தினை நேரில் சென்று ஆய்வு

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம்,  மல்லிப்புதூர் ஊராட்சியில், குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும்; சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S ,அவர்கள்  (08.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி உணவு, இருப்பிடம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டது குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார்.
 பின்னர், குழந்தைகளின் தனித்திறன்கள், விளையாட்டு விருப்பங்கள் மற்றும் இதர தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், பள்ளிக்கல்வித்துறையின் கலைத்திருவிழாவில் மாநில அளவில் இரண்டாம் இடம்  பெற்ற  சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்ல குழந்தைகள் பறை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலர் திருமதி க.அருள்செல்வி சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்ல குழந்தைகள் கண்காணிப்பாளர் திருமதி சி.திலகவதி குழந்தைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News