25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


25 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள்  பயனாளிகளுக்கு வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

25 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.

 விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், கே.புதூர் கிராமத்தில்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  நலத்துறை சார்பில், வீட்டுமனை ஒதுக்கீடு   உத்தரவுகள் பெற்ற 25  பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (04.07.2026)  வழங்கினார்.

தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக  இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.

இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுகிறது. மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டம் கே.புதூர் கிராமத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த 25 குடும்பங்கள்  இலவச வீட்டுமனை  உத்தரவுகள் பெற்றுள்ளதாகவும்,இதுவரை இந்த இடங்களுக்கான பட்டா இல்லை என்பதால்,
  இடங்களை அளவீடு செய்து, பட்டா வழங்கிடுமாறு கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, 25 குடும்பங்களுக்கான இடங்களை அளவீடு செய்து,  இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  நேரில் சென்று வழங்கினார்.

இந்த இடங்களுக்கான அரசு உத்தரவுகளை  பெற்றிருந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் எங்கள் இடங்களை தனித்தனியாக அளவீடு செய்து, இலவச பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் எங்களுக்கு இந்த இடத்திற்கான அரசு அங்கீகாரம் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.தேவசகாயம்,விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் திரு.ராஜாமணி, மண்டல துணை வட்டாட்சியர் திரு.பா.முருகன் மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News