25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மறைந்த நடிகர் மயில்சாமியின்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மறைந்த நடிகர் மயில்சாமியின் "ஆசை”யை நிறைவேற்றிய நடிகர் ரஜினிகாந்த்..

சில மாதங்களுக்கு முன்பு காமெடி நடிகர் மயில்சாமி நெஞ்சு வலி காரணமாக திடீரென்று உயிரிழந்தார்.அவருடைய திடீர் இறப்பு பலரையும் இப்ப வரைக்கும் பீல் பண்ண வைத்துக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில் அவர் ஆசைப்பட்டு கேட்ட ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் செய்து முடித்து இருக்கிறார். மயில்சாமி காமெடி டைம் நிகழ்ச்சியும் அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. இந்த நிலையில் பல திரைப்படங்களிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது.சில நடிகர்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து கலக்கிக் கொண்டிருப்பது போல மயில்சாமியும் அந்த காலத்திலேயே சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் தன்னுடைய திறமையை காட்டி ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்திருந்தார். 

அந்த நேரத்தில் தான் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய 57 வது வயதில் நெஞ்சுவலியின் காரணமாக திடீரென மரணம் அடைந்தார்.நடிகர் மயில்சாமியின் இறப்பு செய்தி கேட்டு அவருடைய உறவினர்களை போலவே அவருடைய ரசிகர்களும் அக்கம் பக்கத்தினரும் திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய வேதனைகளை தொடர்ந்து தெரிவித்து கொண்டு இருந்தனர். ஒரு சில பிரபலங்கள் தான் தாங்கள் வாழும் போதே பலருக்கும் உதவி செய்து மறைந்த பிறகு அந்த உதவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் மயில்சாமியும் ஒருவர்.மயில்சாமியின் இறப்பிற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த் நடிகர் மயில்சாமியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு நான் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது மயில்சாமியின் ஆசை அதை சீக்கிரமாக நிறைவேற்றுவேன் என்று கூறியிருந்தார்.இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். தற்போது அந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதைத் தொடர்ந்து ரசிகர்கள் ஒரு வழியாக பல மாதங்கள் கழித்து மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றி விட்டார் ரஜினிகாந்த் என்று கூறி வருகின்றனர்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News