பாலிவுட்டில் கால் பதிக்கும் 'அமரன்' இயக்குனர்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் திரைக்கு வந்த 'அமரன்' படம், ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது. அடுத்ததாக நடிகர் தனுஷின் 55வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் டி சீரியஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிந்தியில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பணிகள் விரைவில் துவங்குகிறது.
0
Leave a Reply