25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


தாட்கோ அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தாட்கோ அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் தாட்கோ அலுவலகத்தின் மூலம் உறுப்பினர் அட்டை பெற்ற தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளில் எவரேனும் பன்னிரெண்டாம் வகுப்பு 2022-2023-ஆம் கல்வி ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பின், அதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்க வேண்டியுள்ளது. எனவே பன்னிரெண்டாம் வகுப்பு 2022-2023-ஆம் கல்வி ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களின் விபரங்களுடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை நகலுடன் விருதுநகர் தாட்கோ மேலாளர் அலுவலகத்தினை எதிர் வரும் 20.06.2023-ம் தேதிக்குள். தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் அனுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்,

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *