கிரிக்கெட் உலக டெஸ்ட்சாம்பியன் ஷிப் (2025-27) நான்காவது சீசன்.
கிரிக்கெட் உலக டெஸ்ட்சாம்பியன் ஷிப் (2025-27) நான்காவது சீசன் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக இங்கி லாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன்-சச்சின்' டிராபி) பங்கேற் கிறது. முதல் டெஸ்ட் நேற்று லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் துவங்கியது.'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், பீல்டிங் தேர்வு செய்தார்.
ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர் களுக்கு இந்தியா, இங்கிலாந்து அணியினர் மவுன அஞ்சலி செலுத்தினர். கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
இங்கிலாந்து மண்ணில் களமிறங்கிய அறிமுக டெஸ்ட் இன்னிங்சில் சதம் விளாசிய 5வது இந்திய வீரரானார் ஜெய்ஸ்வால். இதற்கு முன் விஜய் மஞ்ச் ரேக்கர் (1952,133 ரன், லீட்ஸ்), சந்தீப் பாட்டீல் (1982, 129* ரன் மான்செஸ்டர்), சவுரவ் கங்குலி (1996, 131 ரன், லார்ட்ஸ்), முரளி விஜய் (2014, 146 ரன், நாட்டிங்காம்) இப்படி சாதித்திருந்தனர். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் டுக்கு 359 ரன் எடுத்து இருந்தது. சுப்மன் (127), ரிஷாப் பன்ட் (65) அவுட் டாகாமல் இருந்தனர்.
0
Leave a Reply