'டி-20' அரங்கில் ஒரு ஆண்டில் அதிக 'ஸ்டிரைக் ரேட்' கொண்ட வீரர் என, இந்தியாவின் அபிஷேக் சர்மா புதிய சாதனை .
துவக்க வீரர் அபிஷேக் சர்மா 25. ரோகித் சர்மா ஓய்வுக்குப் பின், இந்திய 'டி-20' அணியின் 'டி-20' அரங்கில் ரன் குவித்து வருகிறார்.சர்வதேச பேட்டர் தரவரிசையில் 908 புள்ளியுடன் உலகின் 'நம்பர்-1 வீரராக திகழ்கிறார். இந்தியா, பஞ்சாப், ஐதராபாத் (பிரிமியர் தொடர்) அணிகளுக்காக ரன் மழை பொழிகிறார்.
2025ம் ஆண்டில் இவர் மொத்தம் 1602 ரன் எடுத்துள்ளார். உள்ளூர், சர்வதேச 'டி-20'ல் ஒரு ஆண்டில் குறைந்தது,1000 ரன் எடுத்த வீரர்களில், 200க்கும் மேல் என பேட்டிங் 'ஸ்டிரைக் ரேட்' வைத்துள்ள முதல் வீரர் என சாதனை படைத்தார் அபிஷேக். கடந்த ஆண்டு விளையாடிய அனைத்து போட்டியிலும் இவரது பேட்டிங் 'ஸ்டிரைக் ரேட்' 202.01 ஆக உள்ளது.
0
Leave a Reply