25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


இஸ்ரோ  வெற்றிகரமாக இரண்டாவது முறையாக செயற்கைக் கோள்களை, விண்வெளியில்  இணைத்து உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இஸ்ரோ வெற்றிகரமாக இரண்டாவது முறையாக செயற்கைக் கோள்களை, விண்வெளியில்  இணைத்து உள்ளது.

 விண்வெளியில் இரண்டாவது முறையாக செயற்கைக்கோள்களை,'ஸ்பேஸ் டாக்கிங்' பரிசோதனை திட்டத்தின் கீழ், 'இஸ்ரோ' வெற்றிகரமாக இணைத்துள்ளது.வரும் 2035க்குள், விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது.

 

'ஸ்பேடெக்ஸ்' திட்டத்தில், விண்வெளியில் செயற் கைக்கோள்களை ஒருங்கிணைத்து விடுவிக்கும் பரிசோதனையை மேற் கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.பி.எஸ்.எல். வி.,சி -60 ராக்கெட்வாயிலாக, இதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இரண்டு செயற்கைக் கோள்கள்ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, 2024 டிச., 30ல் விண்ணில் செலுத்தப்பட்டன.

 

 கடந்த ஜன., 16ல் ஒரே சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப் பட்ட செயற்கைக்கோள்கள், வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன. 'ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தை , இதன் வாயிலாக,  வெற்றிகரமாக மேற் கொண்ட நான்காவது நாடு, என்ற பெருமையை நம் நாடு அடைந்தது.ஒருங்கிணைப்பு நடந்த இரு மாதங்களுக்கு பின், இரண்டு செயற்கைக் கோள்களும் பிரிக்கப்பட்டன. இந்நிலையில், 'ஸ்பேஸ் டாக்கிங் திட்டத்தின் கீழ், விண் வெளியில்  இஸ்ரோ வெற்றிகரமாக இரண்டாவது முறையாக செயற்கைக் கோள்களை  இணைத்து உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News