25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஸ்ரீவில்லிபுத்தூர், வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம். >> ராஜபாளையம் ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை பணிகள் இடப்பிரச்னையால் கிடப்பில் உள்ளது. >> ராஜபாளையம் சுற்று பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம் >> ராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால்சாரல் மழை >> ராஜபாளையத்தில் புதுப்பிக்கப்பட்டபழைய பஸ் ஸ்டாண்ட் திறப்பு. >> இராஜபாளையத்தில் மாம்பழ விற்பனை அதிகமாக உள்ளன. >> ராஜபாளையம் தென்றல் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு >> செல்வின் சிறப்பு பல் மருத்துவமனை & இம்பிளான்ட் சென்டர் >> Manickam's Badminton Indoor Stadium, Rajapalayam.(3 WOODEN COURTS) >> ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும்,  பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு. >>


வெல்லம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெல்லம்.

சர்க்கரையை போல சுத்திகரிக்கப்படாததால் வெல்லத்தில்பல சத்துக்கள் உள்ளது.குளிர்காலத்தில், உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடியது. புரதம், கால்ஷியம், வைட்டமின் பி12, இரும்புச்சத்து என, பல வகையான சத்துக்கள் வெல்லத்தில் உள்ளது. உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இரவு உணவுக்கு பிறகு, சிறிது வெல்லத்தை உட்கொள்வதை வழக்கமாக கொண்டால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

வயிற்றில் வாயு உருவாவதையும், செரிமானம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்கிறது.குளிர்காலத்தில் அல்லது ஜலதோஷத்திற்கு வெப்பத்தன்மை காரணமாக, சளி மற்றும் இருமல் ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். பால் அல்லது தேநீரில் கலந்து பருகலாம். மேலும், எலுமிச்சை, இஞ்சி சாறில் வெல்லம் சேர்த்த பானமாக தயாரித்து குடிக்கலாம்.*தினமும், சிறிதளவு வெல்லம் சாப்பிட்டுவந்தால், முகப்பருக்கள் வராமல், சருமம்பளபளக்கும். இதிலுள்ள பொட்டாஷியம், இதயம் தொடர்பான நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட்டால், இரவு உணவுக்கு பின், ஒருதுண்டு வெல்லம் சாப்பிட்டு வந்தால், அதிலிருந்து விடுபடலாம். வெல்லத்தை இஞ்சியுடன் சேர்த்து சூடாக்கி, வெதுவெதுப்பாக சாப்பிடுவது தொண்டை புண்ணுக்கு சிறந்த மருந்து. இதன் மூலம், குரலின் தன்மை சிறப்பாக இருக்கும். தினமும் ஒரு துண்டு வெல்லத்துடன் இஞ்சி சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 20 கிராம் வெல்லத்தை தினமும் உட்கொள்ளலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News