25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வெல்லம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெல்லம்.

சர்க்கரையை போல சுத்திகரிக்கப்படாததால் வெல்லத்தில்பல சத்துக்கள் உள்ளது.குளிர்காலத்தில், உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடியது. புரதம், கால்ஷியம், வைட்டமின் பி12, இரும்புச்சத்து என, பல வகையான சத்துக்கள் வெல்லத்தில் உள்ளது. உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இரவு உணவுக்கு பிறகு, சிறிது வெல்லத்தை உட்கொள்வதை வழக்கமாக கொண்டால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

வயிற்றில் வாயு உருவாவதையும், செரிமானம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்கிறது.குளிர்காலத்தில் அல்லது ஜலதோஷத்திற்கு வெப்பத்தன்மை காரணமாக, சளி மற்றும் இருமல் ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். பால் அல்லது தேநீரில் கலந்து பருகலாம். மேலும், எலுமிச்சை, இஞ்சி சாறில் வெல்லம் சேர்த்த பானமாக தயாரித்து குடிக்கலாம்.*தினமும், சிறிதளவு வெல்லம் சாப்பிட்டுவந்தால், முகப்பருக்கள் வராமல், சருமம்பளபளக்கும். இதிலுள்ள பொட்டாஷியம், இதயம் தொடர்பான நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட்டால், இரவு உணவுக்கு பின், ஒருதுண்டு வெல்லம் சாப்பிட்டு வந்தால், அதிலிருந்து விடுபடலாம். வெல்லத்தை இஞ்சியுடன் சேர்த்து சூடாக்கி, வெதுவெதுப்பாக சாப்பிடுவது தொண்டை புண்ணுக்கு சிறந்த மருந்து. இதன் மூலம், குரலின் தன்மை சிறப்பாக இருக்கும். தினமும் ஒரு துண்டு வெல்லத்துடன் இஞ்சி சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 20 கிராம் வெல்லத்தை தினமும் உட்கொள்ளலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News