வள்ளலார் இராமலிங்கனார் நினைவு தினமான 01.02.2026 அன்று ஒரு நாள் மட்டும் FL-1 / FL-2 / FL-3 / FL-3A / FL-3AA / FL-4A மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் FL-1 / FL-2 / FL-3 / FL-3A / FL-3AA / FL-4A மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி வள்ளலார் இராமலிங்கனார் நினைவு தினமான 01.02.2026 ஞாயிற்றுக் கிழமை அன்று (ஒரு நாள் மட்டும்) தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் FL-1 / FL-2 / FL-3 / FL-3A / FL-3AA / FL-4A மற்றும் FL-11 ஆகிய மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply