சத்து நிறைந்த கேரட்
மத்திய ஆசியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாரசீகப் பகுதியான ஈரானில்,10ம் நுாற்றாண்டில், முதன்முதலில் கேரட் அறிமுகமானது. அங்கிருந்து ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என, உலகெங்கிலும் பரவியது.
ஆரம்பத்தில் ஊதா, மஞ்சள், வெள்ளை நிறத்திலேயே கேரட்கள் இருந்தன. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள விவசாயிகள், 16ம் நுாற்றாண்டில் அறிமுகப்படுத்திய ஆரஞ்சு நிற கேரட்கள், தற்போது உலகம் முழுவதும் பரவலான புழக்கத்தில் உள்ளன.
கேரட்டில், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, கே,நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. கண் பார்வை, தோல், இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த கேரட் உதவுகிறது. குறைந்த கலோரி, கொழுப்பு இருப்பதால், உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மாலைக்கண் நோயை குணப்படுத்தும் மாமருந்தெனவும் போற்றப்படுகிறது.
கேரட்டில் அதிக அளவு பீட்டா-கரோட்டின் (Beta-carotene) மற்றும் வைட்டமின் A உள்ளது, இது மாலைக்கண் நோய் வராமல் தடுத்து, கண்பார்வையை கூர்மையாக்குகிறது.
கேரட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும், இளமையுடன் இருக்கவும் உதவுகின்றன.
கேரட்டில் உள்ள பொட்டாசியம் சத்து, இரத்த அழுத்தத்தை (Blood Pressure) சீராக வைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
நார்ச்சத்து (Fiber) அதிகமாக இருப்பதால், செரிமான கோளாறுகளை சரிசெய்து, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த உணவாக கேரட் பயன்படுகிறது.
கேரட்டில் உள்ள வைட்டமின் C மற்றும் பிற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.
கேரட் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து இரவு பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது,
தினமும் கேரட்டை தவறாமல் சாப்பிட்டால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் வைட்டமின் சி எலும்புகளை வலுவாக்கும்.இதில் அதிகளவில் பொட்டாசியம் நார்ச்சத்து உள்ளன மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.
கேரட் சாறுடன் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து குடித்தால் வாயுத்தொல்லை பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
சாலட், சூப், அல்வா, கேக் மற்றும் புட்டிங் போன்ற பல உணவு வகைகளில்கேரட் பயன்படுத்தப்படுகிறது.
0
Leave a Reply