25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


திருமண தடைகளை நீக்கும்  நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரன் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருமண தடைகளை நீக்கும்  நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரன் .

கள்ளக்குறிச்சி  மாவட்டம் தியாக துருகம் அருகே அமைந்துள்ளது நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரர்  கோவில்  பக்தர்களின் பசியை போக்கும் புண்ணிய தல மாகவும், கேட்கும் வரத்தை கொடுக்கும் ஆலயமாகவும் இக்கோ வில் விளங்குகிறது. 

சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில், தியாகதுருகம் அருகே சந்தைமேட்டு பகுதியில் அமைந்துள்ள ஆவுடையார் கோவில். இக்கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த சித்தர், பல ஆண்டு காலம் இங்கு தங்கி சிவனுக்கு பூஜைகள் செய்தும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கி வந்தார். அப்போது சித்தர் பெருமான், கோவில் வளாகத்திற்குள் வரும் நாக பாம்பின் நஞ்சை தனது கையில் வாங்கி உண்டு வந்துள்ளார். இதனால் அந்த சித்தர் 'நஞ்சுண்ட ஞான தேசிகர்' என அழைக்கப்பட்டார். பின்னர் நாளடை வில், சித்தர் பெருமான் கோவில் மூலவருக்கு அருகில் ஜீவசமாதி அடைவதாக பக்தர்களிடம் கூறிவிட்டு ஜீவ சமாதி அடைந்தார். அதன் பிறகு ஆவுடையார் கோவில், 'நஞ்சுண்ட ஞான தேசிகர் கோவில்' என அழைக்கப்படு கிறது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நஞ்சுண்ட ஞான தேசிகர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்து, தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.

சித்தர் பெருமான் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சித்தர் தனது உடலில் உள்ள கை, கால்கள் மற்றும் தலை ஆகிய வற்றை தனித்தனியாக பிரித்து மீண்டும் இணைத்ததாகவும், இதனை அப்பகுதி மக்கள் பலர் ஆச்சரியமுடன் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவ்வாறு பார்த்த ஒரு சிலர் அதிர்ச்சியில் இறந்து போனதாகவும் முன்னோர் கள் கூறுகின்றனர்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News