ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா.
புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்காண சித்திரை திருவிழா கடந்த 21-ந் தேதி பூக்குழி திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் பல்வேறு அலங்காரத்துடன் சுவாமிஊர்வலம் நடைபெற்றது. 10-வது நாள் திருவிழாவான பூக்குழி திருவிழாநேற்று நடை பெற்றது.
கோவிலில் பக்தர்கள் அழகு குத்துதல், அக்னி சட்டி முளைப்பாரி ஊர்வலம்சென்றனர். பின்னர் காப்பு கட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களைசெலுத்தினர்.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், இதையடுத்து மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது பின்னர் அம்மன் சப்பரம்
உலா வந்து பூக்குழி திடலை அடைந்தது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். துணை போலீஸ் சூப்பிரண்டு பசினா பீவி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
0
Leave a Reply