ரசிகமணி டி.கே.சி. கல்லாதோருக்கும் கம்பனை அறிமுகம் செய்த தமிழ் ஆர்வலரின்' நினைவு தினம்
தமிழ் கவிதைகளில் இருந்த கருத்துகளை ரசனையுடன் எடுத்துக் கூறியதால் ரசிகமணி டி.கே.சி.' என்று அழைக்கப்பட் டார். 1926ல் சென்னை மாகாண சட்டசபையில் மேலவை உறுப்பினரானார்.தொடர்ந்து,ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனராக பொறுப்பேற்றார். கம்பராமாயண இடைச்செருகலை நீக்கி பதிப்பித்தார். மேடைக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களின் அவசியத்தைக் கூறி ராஜா அண்ணாமலை செட்டியாரை சென்னையில் தமிழ் இசை மன்றம் துவங்க ஏற்பாடு செய்தார். FEB 16 , 1954ல் தன் 71வது வயதில் இதே நாளில் காலமானார்.
0
Leave a Reply