25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கும் அங்கீகாரமற்ற 14 இ-கேட்டரிங் இணையதளங்கள் முடக்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கும் அங்கீகாரமற்ற 14 இ-கேட்டரிங் இணையதளங்கள் முடக்கம்.

ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவையை ஐ.ஆர்.சி.டி.சி. மட்டுமின்றி, அதனால் அங்கீகரிக்கப்பட்ட பிற இ-கேட்டரிங் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) சான்றிதழ் பெறாமல், சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் சில அங்கீகாரமற்ற நிறுவனங்கள் இ-கேட்டரிங் சேவையின் பெயரில் உணவு விற்பனை செய்து வருவதாக பயணிகளிடமிருந்து புகார்கள் எழுந்தன.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அங்கீகாரம் பெறாத 14 இ-கேட்டரிங் இணையதளங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ரயில் பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்ய விரும்பும் பயணிகள், ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிகாரப்பூர்வ ‘புட் ஆன் ட்ராக்’ (Food on Track) மொபைல் செயலி அல்லது ஐ.ஆர்.சி.டி.சி. அங்கீகரித்த உணவு வழங்குநர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News