டப்பிங் கலைஞராக இருந்து நடிகையாக மாறியவர் ரவீணா ரவி
தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக இருந்து, 'ஒரு கிடாயின் கருணை மனு, லவ் டுடே, மாமன்னன்' படங்கள் மூலம் நடிகையாக மாறியவர் ரவீணா ரவி. தற்போது மலையாளத்தில் ஜோ ஜார்ஜ் இயக்கியுள்ள 'ஆசாதி' என்ற படத்தில் வாய் பேசாத சிறை கைதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுப்பற்றி ரவீணா கூறுகையில் "இந்த படத்தில் முதலில் என்னுடைய கதாபாத்திரம் பேசும் விதமாகத்தான் இருந்தது. ஆனால் என் மீது இரக்கம் வரவேண்டும் என்பதற்காக வாய் பேசாத மற்றும் கர்ப்பிணி கதாபாத்திரமாக மாற்றினர். வாணி விஸ்வநாத் போன்ற சீனியர் நடிகருடன் எப்படி நடிக்க போகிறேன் என பயந்த நிலையில் பேசாமலேயே நடிக்க வைத்ததால் தப்பித்தேன்" என்றார்.
0
Leave a Reply