தபால் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களில் இதுவரை 1,255 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தின்பேரில் வீட்டிலிருந்தே தபால் வாக்களிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் தபால் வாக்களிக்க மொத்தம் *3,853* வாக்காளர்கள் (2,009 மூத்த குடிமக்கள் மற்றும் 1,844 மாற்றுத்திறனாளிகள்) படிவம் 12D மூலம் விண்ணப்பித்திருந்தனர். கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் வாக்கு சேகரிப்பில், இதுவரை மாவட்டத்தில் மொத்தம் *1,255* தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. அதன் தொகுதிவாரியான விவரம்:
*இராஜபாளையம்:* 149 மூத்த வாக்காளர்கள், 115 மாற்றுத்திறனாளிகள்.
*திருவில்லிபுத்தூர்:* 109 மூத்த வாக்காளர்கள், 140 மாற்றுத்திறனாளிகள்.
*சாத்தூர்:* 61 மூத்த வாக்காளர்கள், 45 மாற்றுத்திறனாளிகள்.
*சிவகாசி:* 74 மூத்த வாக்காளர்கள், 66 மாற்றுத்திறனாளிகள்.
*விருதுநகர்:* 63 மூத்த வாக்காளர்கள், 78 மாற்றுத்திறனாளிகள்.
*அருப்புக்கோட்டை:* 135 மூத்த வாக்காளர்கள், 98 மாற்றுத்திறனாளிகள்.
*திருச்சுழி:* 45 மூத்த வாக்காளர்கள், 77 மாற்றுத்திறனாளிகள்.
ஒட்டுமொத்தமாக 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து இதுவரை *636 மூத்த குடிமக்கள்* மற்றும் *619 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1,255 பேர்* தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.
தபால் வாக்குகளைச் சேகரிக்க, வாக்குப்பதிவு அலுவலர் தலைமையில் நுண்பார்வையாளர் உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட *49 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் வரும் 2026 ஏப்ரல் 17-ம் தேதி வரை* விண்ணப்பித்த வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.
படிவம் 12D-இல் விண்ணப்பித்தவர்கள் பின்னர் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாது என்பதால், தபால் வாக்குக்கு விண்ணப்பித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட நாட்களில் வீட்டிலேயே இருந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் *மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S,.* அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
0
Leave a Reply