சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ,விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், சொக்கநாதர் கோயில், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், ரெங்கநாதசுவாமி கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று காலை 6:00 மணிக்கு ஆண்டாள்கோயிலில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரெங் கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள், பழனி ஆண்டவர், பெரிய மாரியம்மன் கோயிலில், உள்ளூர் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் பல்வேறு நகரங்களைச்சேர்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
0
Leave a Reply