சஞ்சு சாம்சன் ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு.
மாதந் தோறும் சிறந்த வீரர், வீராங்கனையை வாக்கெடுப்பு வாயிலாக (ஐ.சி.சி.) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வுசெய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்துக்கானசிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் இந்திய அணியின் 5 பேட்ஸ்மேன் சஞ்சுசாம்சன், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தென் ஆப்பிரிக்க - பேட்ஸ்மேன் கனோர் எஸ்டர் ஹய்ஜென் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இவர்களில் ரசிகர்கள் மற்றும் விருதுக்கான கமிட்டியினர் அளித்த வாக்குகள்அடிப்படையில் சஞ்சு சாம்சன் விருதுக்கு தேர்வானார்.
சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் சஞ்சு சாம்சன் 3 அரைசதம் உள்பட 321 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதுக்கு தேர்வானார். அவருக்கு முதல்முறை யாக ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை பெற்றுக் கொடுத்துள்ளது.
0
Leave a Reply