நமது மாவட்டத்திற்கு உகந்த வறட்சியைத் தாங்க வல்ல வறண்ட நில பழப்பயிர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடவு செய்வதற்கான முன்னெடுப்பு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (31.07.2025) தோட்டக்கலைத்துறை மற்றும் அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் இணைந்து செயல்படுத்தும் நமது மாவட்டத்திற்கு உகந்த வறட்சியைத் தாங்க வல்ல வறண்ட நில பழப்பயிர்களை நடவு செய்வதற்கான முன்னெடுப்பு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பருவமழைக்கு முன்பாக அதிக அளவிலான இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்து மிகுந்த பழப்பயிர்களான சீத்தா, நாவல், நெல்லி, மாதுளை, சப்போட்டா, விருசம்பழம், களாக்காய், பால்சா, மல்பெரி, வன்னி மரம், விளாம்பழம், வில்வம், முள்சீத்தா, மேற்கு இந்திய செர்ரி ஆகிய 14 வகையான வறண்ட நிலப் பழப்பயிர்கள் நடவு செய்யப்பட உள்ளது.
இது பருவ மழை தொடங்கிய உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் நடவு செய்வதற்கான ஒரு முன்னெடுப்பு நிகழ்வாகும்.அதிக வருமானம் தரக்கூடிய நமது மாவட்டத்திற்கு உகந்த வறட்சியை தாங்க வல்ல இப்பயிர்களை விவசாயிகள் தங்கள் நிலத்திலும் நடவு செய்து கூடுதல் வருமானம் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு காய்கறி விதைத் தொகுப்புகளை வழங்கினார்.இந்நிகழ்வில், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி.சூ.சுபாவாசுகி, தோட்டக்கலை இணைப் பேராசிரியர் திரு.ப.பாலசுப்பிரமணியன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply