அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பு பயில சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (01.08.2025) கடந்த ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு பயில சேர்க்கை ஆணை பெற்ற சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், மெட்டுக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவிகள் அழகுமாரி மற்றும் நாகரஞ்சனி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவன் கணேஷ்குமார் ஆகிய 3 மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என் ஓ.சுகபுத்ரா.I A S. , அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.
0
Leave a Reply