அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறைச் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறைச் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,, அவர்கள் (10.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரியில், வேளாண்மைத்துறையில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தின் கீழ் பயனாளிக்கு 70 சதவீத மானியத்தில் பவர் டில்லர் இயந்திரம் வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நோில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து பயனாளியுடன் கலந்துரையாடினார்.
மேலும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரியில்,வேளாண்மை பொறியில் துறையின் சார்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பண்ணைக்குட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, வில்லிபத்திரியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் சார்பில் மாநில தோட்டகலை வளர்ச்சித் திட்டம் தென்னை பரப்பு விரிவாக்கம் மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள 48 தென்னை கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், அழகிய நல்லூர் ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் தெளிப்புநீர் பாசனக் கருவிகள் முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், முழு மானியத்தில் வழங்கப்பட்டுள்ள சப்போட்டா பழமரக்கன்றுகளையும், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அழகிய நல்லூர் ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட தேனீ பெட்டிகள் மற்றும் தேன் எடுக்கும் கருவியினையும், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மானியத்தில் வழங்கப்பட்டுள்ள தேனீப்பெட்டி, மண்புழு உரப்படுக்கை மற்றும் கால்நடைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,)திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ)திருமதி சுமதி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபாவாசுகி, செயற்பொறியாளர் திருமதி இந்திரா, வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply