25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


கிராமத்து பிரண்டைஊறுகாய் (village style pirandai pickle )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிராமத்து பிரண்டைஊறுகாய் (village style pirandai pickle )

தேவையான பொருட்கள் - 

1 கப்சுத்தம் செய்து நறுக்கின பிரண்டை,1/4 கப் நறுக்கின பெரிய வெங்காயம் ,2டேபிள்ஸ்பூன் தோலுரித்து நறுக்கின பூண்டு,

1டீ ஸ்பூன் ம.தூள், 2 ஸ்பூன் காஷ்மீரி மி.தூள்,தேவைக்குகல்லுப்பு, 2 1/2ஸ்பூன் கடுகு,1ஸ்பூன் வெந்தயம்.2 சி.மிளகாய்,

1 ஆர்க்குகருவேப்பிலை, 1 ஸ்பூன்பெருங்காயத் தூள், 1/4 கப் ந.எண்ணெய்,.1 கோலி குண்டளவு புளி 

செய்முறை –

பிரண்டையை நன்கு சுத்தம் செய்து, நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயம், பூண்டை நறுக்கிக் கொள்ளவும். வெறும் கடாயில், கடுகு, வெந்தயத்தை நன்கு வறுக்கவும்.வறுத்து தட்டில் ஆற விடவும்.

சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு,சற்று கொரகொரப்பாக பொடித்து தட்டில் போடவும்.அடுப்பைமீடியத்தில்வைத்து,ந.எண்ணெய்காய்ந்ததும்,வெங்காயம், புளி,பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.பௌலில் ஆற விடவும்.பின், மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.

கடாயில்,மீதமான ந.எண்ணெயில், பிரண்டையை நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.அரைத்த விழுதுடன், வதக்கிய பிரண்டையை போட்டு நன்கு அரைக்கவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து, ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகை போடவும்.கடுகு பொரிந்ததும், மிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும்.

தாளித்த எண்ணெயில், ம.தூள், மி.தூள், உப்பு போட்டு நன்கு, வதக்கவும்.அடுத்து வதக்கிய விழுதை போட்டு ஒன்று சேர சுருள வதங்கியதும், அடுப்பை நிறுத்தி விடவும்.பிறகு, வறுத்த பொடி, பெருங்காயத் தூள் போட்டு கிளறவும்.அடுத்து,பௌலுக்கு, மாற்றி, மேலே காய்ச்சாத ந.எண்ணெயை விடவும். இப்போது, சுவையான, ஆரோக்கியமான, கிராமத்து பிரண்டை ஊறுகாய் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News