25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


நட்சத்திர வெடிப்பால் மாற்றமடைந்த வைரஸ். 'சூப்பர் நோவா'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நட்சத்திர வெடிப்பால் மாற்றமடைந்த வைரஸ். 'சூப்பர் நோவா'

நம் பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான நட் சத்திரங்கள் உள்ளன. அவற் றின் ஆயுள் முடியும்போது அவை வெடித்துச் சிதறும். இந்தப் பெரு வெடிப்பை 'சூப்பர் நோவா' என்று அழைப்பார்கள்.  நம்முடைய சூரிய மண்டலத் துக்கு அருகே இந்த சூப் பர் நோவா நடக்கும்போது அதன் தாக்கம் பூமியிலும் இருக்கும். பூமியில் பல - மாற்றங்கள் நிகழ்ந்ததற்கு இந்த சூப்பர் நோவாவும் காரணம் என்று விஞ்ஞா னிகள் கருதுகின்றனர்.

நட்சத்திரங்கள் வெடிப்பின் போது, பலவிதமான கதிரியக்கங்கள் பிரபஞ்சம்  முழுதும் பரவும். அவை பூமியையும் தாக்கும்.எப்படிச் சூரியனிலி ருந்து வருகின்ற சூரியப் புயல் பூமியில் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அது போலவே இந்தக் கதிர் இயக்கங்களும் பூமியில் உள்ள உயிரினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 65 லட்சம்ஆண்டுகளுக்கு முன் பாக இப்படி நடந்த ஒரு நட்சத்திரவெடிப்பின்  போது கதிரியக்க இரும்பு பூமியை வந்து அடைந்தது.ஒரு லட்சம் ஆண்டுக ளுக்கு முன்பாக நடந்த ஒரு நட்சத்திர வெடிப்பால்ஏராளமான காஸ்மிக் கதிர் கள் பூமியை வந்தடைந் துள்ளன.

இந்த கதிரியக்கம் மிகவும் ஆபத்தானது. உயிரினங்களுடைய மரப ணுவில் மாற்றத்தை உரு வாக்கும் என்று பல ஆய் வுகள் தெரிவிக்கின்றன.25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியில் இருந்து 457 ஒளி ஆண்டுகள் தொலைவில் சில நட்சத் திரங்கள் வெடித்துள்ளன.

இதே காலகட்டத்தில் ஆப்ரிக்காவில் சில ஏரிகளில் வாழ்ந்த வைரஸ்களில் வித்தியாசமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தக் கதிரியக்கத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவே வைரஸ்கள் இவ்வாறு தங்களை மாற்றிக் கொண்டுள்ளன என்று விஞ்ஞானிகள்  கருதுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News