அபிஷேக் சர்மா சிக்சர் மழையில் இந்திய அணி வெற்றி.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் மோதின.இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில், ஐந்தாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்திய அணி யில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில் முகமது ஷமி இடம் பெற்றார்.'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், 'பவுலிங்' தேர்வு செய்தார். அபிஷேக் ஆட்டம் ஆரம்பமானது. இவரது சிக்சர் மழையில் வான்கடே மைதானம் அதிர்ந்தது. ஓவர்டன் ஓவரில் வரிசையாக இரு சிக்சர் விளாசிய இவர், 17 பந்தில் அரைசதம் எட்டினார்.
அபிஷேக் சர்மா, தொடர்ந்து சிக்சர், பவுண்டரி விளாச, இந்திய அணி 16 ஓவரில் 202/6 ரன்னை எட்டியது.ரஷித் 'சுழலில்' அபிஷேக் (54 பந்தில் 135 ரன், 7 பவுண்டரி, 13 சிக்சர்) அவுட்டானார். இவரது ஆட் டத்தை பயிற்சியாளர் காம்பிர், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டினர். இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் டுக்கு 247 ரன் எடுத்தது. இந்திய பந்து வீச்சில் இங்கிலாந்து அணி பில் சால்ட் மட்டும் 55 ரன் எடுத்தார். 10.3 ஓவரில் 97 ரன்னுக்கு தோல்வி அடைந்தது.
0
Leave a Reply