25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


ஆரோக்கியம் நிறைந்த காலிபிளவர் ...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆரோக்கியம் நிறைந்த காலிபிளவர் ...

நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் காலிபிளவர் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியம் நிறைந்ததுமாகும். இதில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.காலிபிளவர் பச்சை, ஊதா மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இருக்கிறது. ஒரு சில இடங்களில் இந்த காயானது மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களில் இருக்கிறது. இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு வகை காலிஃப்ளவரும் அதற்கென்று தனித்துவமான பயன்களைக் கொண்டிருக்கின்றன.

காலிபிளவரில் உள்ள அதிகப்படியான நார்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றன.

வைட்டமின் சி மற்றும் கே நிறைந்துள்ளதால் எலும்புகள் வலுப்பெறவும் இது உதவுகிறது. செரிமான மேம்பாடு, உடல் எடை குறைப்பு, புற்றுநோய் எதிர்ப்பு உணவுகள், வைட்டமின் சி சத்து,குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட காய்கறி என்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதனை தாராளமாக உட்கொள்ளலாம். 

இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள'சல்பராபேன்' என்ற சத்து ரத்த அழுத்தத்தை குறைத்து இதய தமனிகளை பாதுகாக்கிறது. மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் தேவையான'கோலின்' சத்து இதில் ஏராளமாக உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News