ஆஸ்துமா நோயாளிகள் செய்ய….
ஆஸ்துமா நோயாளிகள் முறையாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது அவசியம்.
வாகனம் ஓட்டும் போதும். சமையல் செய்யும் போதும், ஒட்டடை அடிக்கும் போதும் துணியால் முகத்தை மூடிக்கொள்வது அவசியம்
ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவரிடம் தாங்கள் பிற நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளைக் காட்டுவது மிக முக்கியம்.
யோகா பயிற்சி அவசியம்.
சரியாக உட்காரும். உறங்கும் முறைகள் தெரிய வேண்டும்.
தொப்பை, உடல் பருமனைக் குறைக்கவும்.
மன தைரியம், உற்சாகம், ஊக்கம் ஆகியவற்றை ஆலோசனை மூலம் அதிகரித்தல் வேண்டும்.
ஆஸ்துமா சிகிச்சையை மருத்துவரின் அனுமதியோடு மட்டுமே தொடங்க வேண்டும்.
தேவைப்படும் போது நீராவி பிடித்தல்.
சைனஸ்,வயிறு எரிச்சல் போன்றவை தீர்க்கப்பட வேண்டும்.
இன்ப்ளுயன்சா, நிமோனியா தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.
மருந்துப் பம்புகள் உபயோகிக்கும் முறையைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தேவையெனில் சக்கர நாற்காலியை உபயோகிக்கத் தயங்கக்கூடாது.
காற்றோட்டமான அறை, வீடு அவசியம்.
வீட்டில் அவசர உதவிக்கு அழைப்பு மணி (Alaram) தேவை.
0
Leave a Reply