, "நகரேஷு காஞ்சி “ஏழு மோட்சபுரிகள்
அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகாபுரி, துவாரகா ஆகியவற்றை மோட்ச புரி தலங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்வார்கள். மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகாபுரி, துவாரகா அயோத்யா, சைவ சப்த மோக்ஷ தாயகம் என்பது ஸ்லோகம்.
ராமஜன்ம பூமியான அயோத்யா கிருஷ்ண பரமாத்மா பிறந்த பூமியான மதுரா, கங்கை விண்ணிலிருந்து பூமிக்குப் பிரவேசம் செய்யும் தலமாகிய மாயா எனப்படும் ஹரித்துவார், காசி என்ற புண்ணிய ஷேத்திரம், "நகரேஷு காஞ்சி' எனப் புகழப்படும் காஞ்சி மாநகர், அவந்திகா எனும் உஜ்ஜயினி மற்றும் கிருஷ்ண பரமாத்மா ஆண்டருளிய துவாரகா ஆகிய ஏழும் மோட்சபுரிகள் என்று குறிப்பிடப் பெறுகின்றன. இத்தலங்கள் பிறப்பது, வாழ்வது, (நிலைப்பது), இறப்பது என்ற மனித வாழ்க்கையின் ஆதி, நடு, அந்தம் என்ற மூன்று நிலைகளுக்கும் தலையாய இடங்கள் என்று கூறுகிறது புராணம்.
0
Leave a Reply