25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


15TH APRIL விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

15TH APRIL விளையாட்டு போட்டிகள்

டேபிள் டென்னிஸ், 

 'அல்டிமேட் டேபிள் டென்னிஸ்' (யு.டி.டி.,) தொடர் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், 8 அணிகள் பங்கேற்கும் 6வது சீசன் (மே29 ஜூன்15) ஆமதாபாத்தில் நடக்கவுள்ளது. 

இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம்நேற்று மும்பையில் நடந்தது. 56 பேர்ஏலத்தில் இடம் பிடித்தனர். ஒவ்வொரு அணியும் ரூ. 50 லட்சம் வரை செலவு செய்தன. அடிப்படை தொகை என4 பிரிவுகளாக (ரூ.11, 7,4,2 லட்சம்) பிரிக்கப்பட்டன.

கோவா அணி இந்தியாவின் ஹர்மீத் தேசாயை  வீரர்களை தக்கவைக்கும் விதியின் அடிப்படையில் ரூ.14 லட்சத்துக்கு தன் வசப்படுத்தியது.  

ரூ.14.1 லட்சம் கொடுத்து, இந்தியாவின் தேசிய சாம்பியன் தியா சிட்டா லே வை டில்லி அணி தட்டிச் சென்றது. 

ரூ. 12 லட்சம் கொடுத்து, இந்தியா வீராங்கனை மணிகா பத்ராவை ஆமதாபாத் அணி  கொண்டு தட்டிச் சென்றது. 

செஸ்  

பெண்களுக்கான  'கிராண்ட் ப்ரி' செஸ்,புனேயில் சர்வதேச செஸ்கூட்டமைப்பு ('பிடே') சார்பில் ஐந்தாவது தொடர் நடக்கிறது.

நேற்று இரண்டாவது சுற்று போட்டி நடந்தன. இந்திய வீராங்கனைகள் திவ்யா, வைஷாலி ,17வது நகர்த்தலில் வைஷாலி தவறு 'செய்தார்., போட்டியின் 26 வது நகர்த்தலில் திவ்யா வெற்றி பெற்றார்.

இந்தியாவின் ஹரிகா, போலந்தின் அலினா மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. சீனாவின் ஜு ஜினெர், மங்கோலியாவின் பக்துயாக்கை வீழ்த்தினார். இரண்டு சுற்று முடிவில் திவ்யா (2.0), ஜுஜினெர் (2.0), ரஷ்யா T வின் போலினா (1.5) 'டாப்-3' இடத்தில் உள்ள னர். ஹம்பி (1.0), 5வது, ஹரிகா (0.5), 10 வது இடத்தில் உள்ளனர்.

பாட்மின்டன்  

புதிய தரவரிசை பட்டியல்  சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் வெளியானது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து, சமீபத்திய சீன தொடரில், இரண்டாவது சுற்றில் தோற்றதால்,ஒரு இடம் பின்தங்கி, 18 வது இடம் பிடித்தார். மாளவிகா (22), ரக்சித்தா ஸ்ரீ (42), அனுபமா (44), ஆகர்ஷி (49) உள்ளிட்டோர் 'டாப்-50' பட்டியலில் உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென், 2 இடம் பின்தங்கி, 18வது இடம் பெற்றார்.பிரனாய் 30 வது இடத்தில் உள்ளார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News