25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தோட்டக்கலை ,மலைப்பயிர்கள் துறை சார்பாக நடைபெற்ற பிரம்மாண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தோட்டக்கலை ,மலைப்பயிர்கள் துறை சார்பாக நடைபெற்ற பிரம்மாண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தி நேர்மையான தேர்தலை எதிர்கொள்ளவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நிகழ்ச்சிகள் நடைபெற்று  வருகின்றன.

 இளம் வாக்காளர்களின் எழுச்சிமிகு விழிப்புணர்வு

 இதன் ஒரு பகுதியாக,  (07.04.2026) 205-சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட AAA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பாக கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்பான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

 நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:

  உறுதிமொழி ஏற்பு:  "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

  வண்ணமயமான ரங்கோலி விழிப்புணர்வு: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவியர் அனைவரும் ஒருங்கிணைந்து பல்வேறு வண்ண மலர்களை பயன்படுத்தி ரங்கோலி மூலம் '100% VOTE' என்ற வடிவத்தை உருவாக்கி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

  தோட்டக்கலைத்துறையின் பங்களிப்பு:

  மாவட்ட தேர்தல் அலுவலரின் நேரடி மேற்பார்வையில், இக்கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை இச்சிறப்பு நிகழ்வினை ஒருங்கிணைத்தது.

 முக்கியப் பங்கேற்பாளர்கள்

 இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்தார். மேலும், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி சுபவாசுகி அவர்கள், அரசு அலுவலர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியர்கள் இந்தப் பெரும் ஜனநாயகத் திருவிழாவிற்கான விழிப்புணர்வுப் பணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News