பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வழிகாட்டி.
உங்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம். யாராவது உங்களுக்கு அசௌகரியமாக நடந்துகொண்டாலோ, தவறான முறையில் தொட முயன்றாலோ அல்லது பயமுறுத்தினாலோ, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நினைவில் கொள்ள வேண்டியவை.
- யாராவது தவறாக நடந்துகொண்டால், "வேண்டாம்!" என்று சத்தமாக சொல்லுங்கள்.
- அந்த இடத்திலிருந்து உடனடியாக விலகி, பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள்.
- நடந்த விஷயத்தை அம்மா, அப்பா, ஆசிரியர் அல்லது நீங்கள் நம்பும் பெரியவரிடம் உடனே தெரிவியுங்கள்.
- அவசர உதவி தேவைப்பட்டால் 100 அல்லது 1091 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.
- எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. தவறு தவறாக நடந்துகொள்பவர்களுடையது.
தவிர்க்க வேண்டியவை
- தெரிந்தவர் என்றாலும், அவர்களுடன் தனியாக செல்ல வேண்டாம்.
- யாராவது தவறாகத் தொட முயன்றால் அமைதியாக இருக்காதீர்கள்.
- பயம் அல்லது வெட்கம் காரணமாக நடந்ததை யாரிடமும் மறைக்காதீர்கள்.
- சாக்லேட், பரிசு, பணம் போன்றவற்றைக் கொடுத்து ஏமாற்ற முயற்சிப்பவர்களை நம்பாதீர்கள்.
- தனியாக வெறிச்சோடிய அல்லது இருண்ட இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும்.
நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை. உங்களை அன்புடன் கவனிக்கும் குடும்பத்தினரும், ஆசிரியர்களும், நண்பர்களும் இருக்கிறார்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தைரியமாகப் பேசுங்கள்; மறைத்து வைக்காதீர்கள்.
உதவி எண்கள்
100 - போலிஸ்
1091- பெண்கள் உதவி எண் (24x7)
உங்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.பாலியல் தொல்லை செய்பவர்கள் குற்றவாளிகள்!
அவர்களைப் பற்றி, பயப்பட வேண்டாம்.துணிவுடன் எதிர்த்து, உதவி கேளுங்கள்.
0
Leave a Reply