அடுத்த ஆண்டு முதல் வாகனங்களில் V2V வசதி கட்டாயம்!
சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், வாகனங்கள் ஒன்றுக்கொன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் V2V (Vehicle-to-Vehicle) தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம், சாலையில் பயணிக்கும் ஒரு வாகனம் தன்னைச் சுற்றியுள்ள மற்ற வாகனங்களுடன் தானாகவே தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும். இதனால் அருகில் செல்லும் வாகனத்தின் வேகம், அதன் தொலைவு உள்ளிட்ட தகவல்களை ஓட்டுநர்கள் முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கையாகச் செயல்பட முடியும்.
சிம் கார்டு தேவையின்றி வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் V2V சாதனங்கள், 5.875 முதல் 5.905 GHz வரையிலான அலைவரிசையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
V2V தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான வரைவு விதிகள் தொடர்பாக பொதுமக்களிடமும் மத்திய அரசு கருத்துகளை கேட்டுள்ளது
0
Leave a Reply