25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும் மற்றும் இதுவரை கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்காக சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும் மற்றும் இதுவரை கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்காக சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும் மற்றும் இதுவரை கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்காக சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில்  (13.06.2024) நடைபெற்றது.தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத, குறிப்பிட்ட துறைக்கு விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்கப் பெறாத மாணவர்களுக்கு வழிக்காட்டு விதமாக சிறப்பு குறைதீர்க்கும்  கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாணவர்களிடமிருந்து, உயர்கல்வி பயில்வதற்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார் 100 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாக அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.பின்னர், உயர்கல்விக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் சந்தேகங்கள் மற்றும் குறைகளையும்,உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவரிடமும் அதற்கான காரணங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.

குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டியின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர முடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம், அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி தொடர்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி வளர்மதி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, உட்பட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News