அமெரிக்க ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய 3 அமெரிக்க வீரர்கள்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில், நடப்பு சாம்பியனும் தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலை எதிர்கொண்டார்.
இதில் அல்காரஸ் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 5-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ந்து 18-வது வெற்றியையும் அல்காரஸ் பதிவு செய்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாஃபோ, முன்னாள் சாம்பியனான ரஷியாவின் டேனில் மெட்விடேவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் டியாஃபோ 7-6 (7-1), 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது முறையாக காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த எம். ரேவதி, அமெரிக்காவின் மேரி காம்ஸை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
0
Leave a Reply