ஆத்யா கட்யல் தேசிய துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றார்.
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் டில்லியில், ஜூனியர் பெண்களுக்கான 'டிராப்' பிரிவு தகுதிச் சுற்றில் டில்லியை சேர்ந்த ஆத்யா கட்யல், 15 வயது ,112 முறை இலக்கை தாக்கினார்.
சிறப்பாக செயல்பட்ட ஆத்யா, 42 முறை இலக்கை தாக்கி, சிறப்பாக செயல்பட்டுமுதலிடம் பெற்று தங்கம் தட்டிச் சென்றார். சபீரா (41) வெள்ளி தமிழகத்தின் தனிஷ்கா (28) வெண்கலம் வென்றனர்.
தமிழகத்தின் தனிஷ்கா, நிலா, ஆந்த்ரா இடம் பெற்ற அணி, 295 புள்ளிஎடுத்து அணிகளுக்கான பிரிவில் இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் வென்றனர். டில்லியின் ஆத்யா, பாவ்யா, அனன்யா (323) இடம் பெற்ற அணி தங்கம் வென்றனர்.274 புள்ளி எடுத்த ராஜஸ்தானுக்கு (தர்ஷனா, மைத்ரேயி, மஹிகா) வெண்கலம் கிடைத்தது.
0
Leave a Reply