25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
"குறிஞ்சிச் செல்வர்" டாக்டர்.கொ.மா.கோதண்டம்அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி . >> நான்கு வழிச் சாலை ரயில்வே ஸ்டீல் ஆர்க் பிரிட்ஜ் பணிகள் வேகம் . >> இரு மாதங்களாக கடும் வெயில் பாதிப்பினால் வற்றும் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்: >> ஆக்கிரமிப்புகளை அகற்ற ,புது பஸ் ஸ்டாண்ட் ரோடு விரிவாக்கத்திற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ். >> ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை. >> ராஜபாளையத்தில் மக்காச்சோளம் பயிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி .. >> பள்ளி ஆண்டு விழா , முத்தமிழ் மன்ற விழா. >> விநாயகர் சதுர்த்தி பூஜை >> நெடுஞ்சாலை துறை சார்பில் சங்கரன் கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையி லான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு. >> இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம். >>


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை  காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், குழந்தை திருமணம் தடுப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை  காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், குழந்தை திருமணம் தடுப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், விருதுநகர்  மாவட்ட ம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று (09.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்களின் தலைமையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, நடத்தப்பட்டு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டன.அதன் ஒரு பகுதியாக நாட்டுப்புற கலைக் குழுவினரின் நாடகம் மற்றும் பாடல் வழியே, பெண் குழந்தை திருமணம் குறித்தும், இளம் வயது கர்ப்பம் குறித்தும், மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச எண்கள் (1098 (ம) 181 ) ஆகியவை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டன.

  இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் கி.திலகம், மாவட்ட சமூக நல அலுவலக களப்பணியாளர்கள், மாவட்ட மகளிர் அதிகார மையம் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News