இந்தியா ஆசிய கால்பந்து தகுதி போட்டியில் டிரா.
2027ல் ஆசிய கோப்பை கால் பந்து தொடர் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 134 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
இந்திய அணி மூன்றாவது போட்டியில், தரவரி சையில் 158 வது இடத்திலுள்ளசிங்கப்பூர் அணியை எதிர்கொண் டது. கோல் கீப்பர் குர்பி ரீத்சிங் கேப்டனாக கள மிறங்கினார். முதல் பாதி ஸ்டாப்பேஜ்' நேரத்தில் சிங்கப்பூர் வீரர் இக் ஷான் பன்டி, ஒரு கோல் அடித்தார். இந்திய அணி 0-1 என பின் தங்கியது.
இரண்டாவது பாதி போட்டியின் கடைசி நிமிடத்தில் (90 வது) ரஹிம் அலி, கோல் அடித்து கைகொடுக்க, தோல்வியில் இருந்து தப்பியது இந்திய அணி. முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. இந்தியா, சிங்கப்பூர் அணிகள் மீண் டும் அக். 14ல் கோவாவில் நடக்கும் போட்டியில் மோத உள்ளன.
இதுவரை 3 போட்டியில் 2 டிரா, 1 தோல்வியுடன் இந்திய அணி, 2 புள்ளி மட்டும் பெற்று, பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
0
Leave a Reply