சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டு வில்லைகள் மூலம் விழிப்புணர்வு.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் (11.04.2026) பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டு வில்லைகள் (Stickers):
ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்ற வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், “என் வாக்கு, என் குரல்” என்ற வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகள் (Stickers) வீடு வீடாகச் சென்று ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
உறுதிமொழி ஏற்பு:
தொடர்ந்து, "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
0
Leave a Reply